ராகுல் காந்தி தகுதி நீக்கம்: லண்டனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


ராகுல் காந்தி தகுதி நீக்கம்: லண்டனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து, லண்டனில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவினர் போராட்டம் நடத்தினர்.

லண்டன்,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (வயது 52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள். தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிட பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி அங்கு சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து, லண்டனில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவினர் அங்குள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்திக்கு ஆதரவாக பாதகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story