ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் 5 இந்தியர்களை கொன்றவர் கைது
விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
கான்பெரா,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் ஒரு ஓட்டலின் வெளிப்புறம் உள்ள பகுதியில் பலர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது.
இதில் இந்தியர்களான விவேக் பாட்டியா (வயது 38), விஹான் (11), பிரதிபா ஷர்மா (44), ஜதின் குமார் (30) மற்றும் அன்வி (9) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அந்த கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் ஸ்வாலே (66) என்பவர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story