சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் படகில் தத்தளித்த இலங்கை அகதிகள் 300 பேர் பத்திரமாக மீட்பு!


சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் படகில் தத்தளித்த இலங்கை அகதிகள் 300 பேர் பத்திரமாக மீட்பு!
x

படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூர்,

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தவித்து வருகிறார்கள்.

வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் கடல் வழியாக படகு, கப்பல் மூலம் செல்கிறார்கள்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 300பேர் ஒரு படகில் அங்கிருந்து புறப்பட்டனர். அந்த கப்பல் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று பழுதடைந்தது. இதனால் கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் நடுக்கடலில் தத்தளிக்கிறது.

300 பேர் இருந்த அந்த படகு கடலில் மூழ்கும் நிலையில் இருந்தது. இதனால் கப்பலில் உள்ள இலங்கை அகதிகள் தவிப்புக்குள்ளானார்கள். இதற்கிடையே படகில் இருந்த ஒருவர் இலங்கை கடற்படையினரை தொடர்பு கொண்டு தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் படகில் இருந்த ஒருவர் பேசும் ஆடியோ வெளியானது. படகு காற்றினால் தள்ளப்பட்டு பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையே தத்தளித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

இதையடுத்து கொழும்புவில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியது. இந்த நிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் தெரிவித்தனர்.


Next Story