நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் 6.4 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில், மீண்டும் நேபாளம் குலுங்கியுள்ளது.
காத்மாண்டு,
நேபாளத்தின் மேற்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் நீடித்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. நேபாள நாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.6 ஆக இந்த நில நடுக்கம் பதிவானது. நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி வரையிலும் உணரப்பட்டது.
Related Tags :
Next Story