அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிபர் ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு


அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிபர் ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு
x

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

டெக்சாஸ்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ரோப் என்கிற பெயரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 500க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை இந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு இளைஞர் ஒருவர் பள்ளிக்கூடத்துக்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இதனிடையே பள்ளிக்கூடத்துக்கு அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு விரைந்தனர்.

அவர்கள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த இளைஞர் போலீசாரையும் துப்பாக்கியால் சுட்டார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அதன் பின்னர் இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை போலீஸ் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் டெக்சாசில் பள்ளி ஒன்றில் ஆயுதமேந்திய 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்ட சூழலில், பள்ளி மாணவர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடுச் சட்டம் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story