வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
திருமந்திர நூலை இயற்றியவர், திருமூலர். இவர் தன்னுடைய மூவாயிரம் ஆண்டு வாழ்நாளில் 3 ஆயிரம் பாடல்கள் நிரம்பிய இந்த நூலை உருவாக்கினார். இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோன்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவி நற்காரணி தானே.
விளக்கம்:-
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவளாக அன்னை ஆதிபராசக்தி இருக்கிறாள்.
அந்த சக்தியின் அருளால், அயன் என்னும் பிரம்மன், அரி என்னும் திருமால், அரன் என்னும் சிவன் என பல தெய்வங்கள் தோன்றி, வெவ்வேறு (படைத்தல், காத்தல், அழித்தல்) பணிகளைச் செய்வர்.
பொன்னில் இருந்து பல அணிகலன்கள் உருவாவது போல, அந்த சக்தி, தன்னுடைய ஆருயிரில் இருந்து பலவற்றைத் தெய்வமாக்குவாள். மூவருக்கும் அவளே முதன்மையானவள் ஆவாள்.
Related Tags :
Next Story