கோபி பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


கோபி பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x

கோபி அருகே பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

ஈரோடு

கடத்தூர்,

கோபி அருகே பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

கும்பாபிசேகம்

கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையராவான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் கோவிலின் கும்பாபிஷேக விழா 13-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. முன்னதாக 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி பூஜையும், பூர்ணா குதியும், அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற உள்ளது. 11-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு வாஸ்துசாந்தி நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சாற்றுமுறை மற்றும் தீபாராதனையும் நடைபெற உள்ளது.

12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், தொடர்ந்து காலை 10 மணிக்கு அஷ்டபந்தன நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், இரவு 9 மணிக்கு மூலவர் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. 13-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதி நாராயண பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

அன்னதானம்

அதை தொடர்ந்து தசதானம், தச தரிசனம், சாற்றுமுறை, மகாதீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதேபோல் அங்குள்ள அங்காளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவும் 13-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.


Next Story