ஒரத்தூர் காளியம்மன் கோவில் திருவிழா


ஒரத்தூர் காளியம்மன் கோவில் திருவிழா
x

ஒரத்தூர் காளியம்மன் கோவில் திருவிழா

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே ஒரத்தூர் மேலத்தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் திருவிழா நடை பெற்றது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் கோவிலில் உள்ள விநாயகர், காளியம்மன், பாலமுருகன் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடி எடுத்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் மஞ்சள் நீராட்டு விழா நடை பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒரத்தூர் மேலத்தெரு கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story