ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கோபி

கோபி பச்சைமலை சுப்பிரமணி சாமி கோவிலில் உள்ள மரகத ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் ெசய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து சாமி வீதி உலா நடைபெற்றது.

இதேபோல் மொடச்சூர் சோமேஸ்வரர் கோவில், பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், பவளமலை கைலாசநாதர் கோவில் உள்பட பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கோபி அருகே கூகலூரில் உள்ள மீனாட்சி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு பால், தயிர், எலுமிச்சை பழம், விபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நஞ்சுண்டேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. அப்போது உற்சவமூர்த்தியான நாகேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து நந்தி வாகனத்தில் நாகேஸ்வரர் மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவில், பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தைெயாட்டி நந்திக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பஞ்சகாவியம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ரிஷப வாகனத்தில் சாமி எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இதில் கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி, தேவூர் எடப்பாடி, நெடுங்குளம், அம்மாபேட்டை, குருவரெட்டியூர், சித்தார், பூனாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி உமா மகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் உள் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


Related Tags :
Next Story