சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு


சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு
x

திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

வலங்கைமான்;

திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ வழிபாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷம் மற்றும் சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. வலங்கைமான்அருணாச்சலேஸ்வரர், கைலாசநாதர், வைத்தீஸ்வரர், காசி விசுவநாதர், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், ஆவூர பசுபதீஸ்வரர், அரித்துவாரமங்கலம் பாதாலேஸ்வரர், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், சந்திரசேகரபுரம் சந்திரசேகரேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்புஅபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைப்பெற்றது. இதில், சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஞானபுரீஸ்வரர் கோவில்

திருமக்கோட்டையில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு ஞானபுரீஸ்வரர் கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் நந்திக்கும், ஞானபுரீஸ்வரருக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி அபிஷேகம் நடைபெற்றது. ஒரே நேரத்தில் சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குடவாசல்

திருவீழிமிழலை வீழிநாத சுவாமி திருக்கோவிலில் சோமவார வழிபாடு நடந்தது. இதில் சாமி, அம்பாளுக்கு 108 சங்குகளில் கங்கை, யமுனை, காவிரி, பிரம்மபுத்திரா நதிகளின் புனித நீரை நிரப்பி சங்காபிஷேகம் நடைபெற்றது. மாலை பிரதோஷ பூஜையை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், மஞ்சள், சந்தனம் ஆகிய வற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானையும், நந்தி பகவானையும் வழிபட்டனர். வழிபாடு ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.இதைப்போல குடவாசல் கோடீஸ்வரர் கோவில், சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில், திருப்பாம்புரம் சேசபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சதுரங்கவல்லபநாதர் கோவில்

நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் பூவனூர் கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story