டி.என்.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கோவை அணி வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கோவை அணி வெற்றி
x
தினத்தந்தி 15 July 2018 10:30 PM GMT (Updated: 15 July 2018 8:20 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நெல்லையில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்சும், காரைக்குடி காளையும் மோதின.

நெல்லை,

முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.அடுத்து களம் இறங்கிய கோவை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாருக்கான் (32 ரன்), கேப்டன் அபினவ் முகுந்த் (59 ரன்) அசத்திய போதிலும் இறுதிகட்டத்தில் தடுமாறியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 9 ரன்களே எடுக்க முடிந்தது. கோவை அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை (சமன்) ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் கோவை அணி 6 பந்தில் 14 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய காரைக்குடி அணி 9 ரன்களே எடுத்தது. கோவை பந்து வீச்சாளர் நடராஜன் அவர்களை கட்டுப்படுத்தி தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

Next Story