ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 26 March 2019 2:18 PM GMT (Updated: 26 March 2019 2:18 PM GMT)

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 5-வது லீக் போட்டி தொடங்கியது.

இதனையடுத்து டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

சென்னை-டெல்லி அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 12 முறையும், டெல்லி அணி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்:
டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஷிகர் தவான், காலின் இங்ராம், ரிஷாப் பான்ட், கீமோ பால், அக்‌ஷர் பட்டேல், ராகுல் திவேதியா, ரபடா, டிரென்ட் பவுல்ட், இஷாந்த் ஷர்மா.

Next Story