மும்பை அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ஜெயவர்த்தனே பாராட்டு


மும்பை அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ஜெயவர்த்தனே பாராட்டு
x
தினத்தந்தி 13 May 2019 11:00 PM GMT (Updated: 13 May 2019 10:28 PM GMT)

மும்பை அணி வீரர்களுக்கு, அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி வீரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே டுவிட்டரில் வீடியோ மூலம் பாராட்டு தெரிவித்து இருக்கிறார். அதில், ‘கடினமான கட்டத்திலும் எங்கள் அணியினர் விடாமுயற்சியுடன் போராடினார்கள். எங்கள் அணி வீரர்கள் தவறு செய்தார்கள். ஆனால் அந்த சரிவில் இருந்து மீண்டு வந்தார்கள். அது தான் முக்கியமானது. எல்லா வீரர்களும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தனர். எங்கள் அணியினர் யாரும் ஆரஞ்சு நிற தொப்பியோ (அதிக ரன் குவிப்பவருக்கு வழங்கப்படுவது), ஊதா நிற தொப்பியோ (அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கு அளிக்கப்படுவது) பெறவில்லை. அதில் யார் கவனம் செலுத்தினார்களோ? அவர்கள் அதனை பெற்று இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மும்பை அணியினர் தங்கள் வெற்றியை விசேஷ திறந்த வெளி பஸ்சில் பயணித்து கொண்டாட இருக்கிறார்கள்.


Next Story