இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
கயானா,
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கயானாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. மழையின் காரணமாக ஆட்டம் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனையடுத்து, வெஸ்ட்இண்டீஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கயானாவில் தொடர்ந்து மழைபெய்த காரணத்தினால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் இவின் லீவிஸ் 40 ரன்களுடனும், ஷாய் ஹோப் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினார்.
Related Tags :
Next Story