புரோ கபடி: பெங்கால் அணியிடம் மும்பை தோல்வி


புரோ கபடி: பெங்கால் அணியிடம் மும்பை தோல்வி
x
தினத்தந்தி 11 Sep 2019 11:40 PM GMT (Updated: 11 Sep 2019 11:40 PM GMT)

புரோ கபடி போட்டியில், பெங்கால் அணியிடம் மும்பை அணி தோல்வியடைந்தது.

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற 85-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகள் மோதின. தொடக்கத்தில் பெங்கால் அணி, மும்பையை ‘ஆல்-அவுட்’ செய்தது. முதல் பாதியில் பெங்கால் அணி 16-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடைசி வரை மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. ஆட்டத்தின் முடிவில் பெங்கால் அணி 29-26 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. 15-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் அணி பெற்ற 8-வது வெற்றியாகும். 15-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமநிலை) முடிந்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story