இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அப்ரிடி பாராட்டு


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அப்ரிடி பாராட்டு
x
தினத்தந்தி 19 Sep 2019 9:49 AM GMT (Updated: 19 Sep 2019 9:49 AM GMT)

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இஸ்லமபாத், 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். 

விராட் கோலி  டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை நேற்று பெற்றார். டி20 போட்டியில் அவர், 2,441 ரன்கள் குவித்துள்ளார். இதில் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் அவர் 22 அரைசதங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல், 3 வகையான போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி பெற்றுள்ளார். விராட் கோலியின் இந்த சாதனைப் பட்டியலை ஐசிசி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது.

ஐசிசியின் டுவிட்டுக்கு ரீ-டுவிட் செய்த அப்ரிடி, "வாழ்த்துக்கள் விராட் கோலி நீங்கள் ஒரு சிறந்த வீளையாட்டு வீரர். தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்யுங்கள்." என்று பதிவிட்டார்.

ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்து விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மூன்று வடிவங்களிலும் சராசரியாக 50-க்கு மேல் உள்ள ஒரே சமகால பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டும்தான்.

Next Story