தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி
x
தினத்தந்தி 20 Jan 2020 11:40 PM GMT (Updated: 20 Jan 2020 11:40 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.

போர்ட் எலிசபெத்,

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 499 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் 209 ரன்னில் ஆல்-அவுட்டாகி ‘பாலோ-ஆன்’ ஆனதால் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து இருந்தது. பிலாண்டர் 13 ரன்னுடனும், கேசவ் மகராஜ் 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 2-வது இன்னிங்சில் 88.5 ஓவர்களில் 237 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 71 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோரூட் 4 விக்கெட்டும், மார்கவுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.

Next Story