இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை டிசம்பர் 3-ந் தேதி தொடங்க முடிவு?


இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை டிசம்பர் 3-ந் தேதி தொடங்க முடிவு?
x
தினத்தந்தி 27 May 2020 11:40 PM GMT (Updated: 27 May 2020 11:40 PM GMT)

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை டிசம்பர் 3-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரிஸ்பேன், 

இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 3-ந்தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 11-ந் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந் தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3-ந் தேதியும் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிலெய்டில் நடைபெற இருக்கும் 2-வது டெஸ்ட் பகல்-இரவு ஆட்டமாக அரங்கேற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியினரை தனிமைப்படுத்தி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story