கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.11 கோடி நிதி திரட்டிய கோலி- அனுஷ்கா சர்மா


கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.11 கோடி நிதி திரட்டிய கோலி- அனுஷ்கா சர்மா
x
தினத்தந்தி 12 May 2021 4:54 PM GMT (Updated: 12 May 2021 4:54 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா சேர்ந்து கொரோனா நிவாரண பணிகளுக்காக திரட்டிய தொகை ரூபாய் 11 கோடியை எட்டியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா சேர்ந்து கொரோனா நிவாரண பணிகளுக்காக திரட்டிய தொகை ரூபாய் 11 கோடியை எட்டியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதன் நிவாரண பணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் நிதி திரட்டினர். அதில் அவர்களின் பங்கை ரூபாய் 2 கோடி ஏற்கனவே அளித்திருந்தனர். ரூபாய் ஏழு கோடி என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்ட கோலி மற்றும் அனுஷ்காவின் முயற்சிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் தற்போது இவர்கள் நிவாரண பணிக்காக மொத்தமாக ரூபாய் 11 கோடி சேர்ந்துள்ளது.


Next Story