வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது- டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து


வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது- டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து
x
தினத்தந்தி 22 Oct 2021 4:27 PM GMT (Updated: 22 Oct 2021 4:27 PM GMT)

வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.


20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியின் ஆலோசகராக  முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து கவாஸ்கர் மேலும் கூறுகையில், “வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. டைம்-அவுட்டின் போது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுடன் பேச வாய்ப்புள்ளது. மற்றபடி ஆட்டத்தின் அழுத்தம் தொடங்கி அனைத்தையும் கையாள வேண்டிய பொறுப்பு களத்தில் நிற்கும் வீரர்கள் தான். டோனியை ஆலோசகராக நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது” என்றார். 


Next Story