நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: கான்பூரில் நாளை தொடங்குகிறது
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் நாளை தொடங்குகிறது.
கான்பூர்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 20ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 20ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் நாளை தொடங்குகிறது.
இந்திய அணியில் விராட் கோலிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஒய்வு அளிக்கப்பட்டிருக்கிறது .இதனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ரஹானே செயல்படுவார்.
.மேலும் ரோகித் சர்மா ,பும்ரா,ரிஷாப் பண்ட, முகமது ஷமி,ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது .லோகேஷ் ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிவிட்டார்.
Related Tags :
Next Story