ஐ.பி.எல் கிரிக்கெட் :தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உத்தேச பட்டியல்...?


ஐ.பி.எல் கிரிக்கெட் :தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உத்தேச பட்டியல்...?
x
தினத்தந்தி 30 Nov 2021 12:12 PM GMT (Updated: 30 Nov 2021 12:12 PM GMT)

எந்த அணி யாரை தக்க வைத்து கொண்டது என்பது குறித்து இன்று இரவு 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது.

அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களின் ஏலத்தில் 90 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும். ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்து கொண்டால், அவர்களின் 90 கோடி ரூபாய் கணக்கிலிருந்து 42 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும். அதுவே 3 வீரர்கள் என்றால் ரூ. 33 கோடி, 2 வீரர்கள் என்றால் ரூ.24 கோடி அல்லது ஒரு வீரர் மற்றும் தக்க வைத்து கொண்டது என்றால் ரூ.14 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிக்காக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரைத் தக்கவைத்துள்ளதாகத் தெரிகிறது. இதர அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் உத்தேச  பட்டியல்  வெளியாகி உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ்:  தோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி
மும்பை:  ரோஹித் சர்மா, பும்ரா
கொல்கத்தா: சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்
பெஙக்ளூர்:  விராட் கோலி, மேக்ஸ்வெல்
டெல்லி:  ரிஷப் பண்ட் , பிருத்வி ஷா, அக்‌ஷர் படேல், நோர்கியா
சன்ரைசர்ஸ்: கேன் வில்லியம்சன் 
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன்

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் வேறொரு அணிக்குத் தலைமை தாங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்தமுறை எந்தவொரு வீரரையும் பஞ்சாப் அணி தக்கவைக்க விரும்பவில்லை என்றொரு தகவல் வெளியாகியுள்ளது. 

எந்த அணி யாரை தக்க வைத்து கொண்டது என்பது குறித்து இன்று இரவு 9.30  மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.


Next Story