ஐ.பி.எல் கிரிக்கெட்: அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..


ஐ.பி.எல் கிரிக்கெட்: அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..
x
தினத்தந்தி 1 Dec 2021 11:49 AM GMT (Updated: 1 Dec 2021 11:49 AM GMT)

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் நேற்று வெளியானது.


ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் நேற்று  வெளியானது . அதில் மூன்று வீரர்கள் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்டனர் .

 ஜடேஜா (சென்னை) , ரோகித் சர்மா  (மும்பை) , ரிஷாப் பண்ட் (டெல்லி ) ஆகிய அணிகள் இந்த வீரர்களை அதிகமான தொகைக்கு  (ரூ.16 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளனர் 


Next Story