

பெங்களூரு,
பெங்களூருவில் நடந்து வரும் பெங்களூரு-பஞ்சாப் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.
அதிரடி காட்டிய டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82* ரன்களும், ஸ்டோய்னிஸ் 46*, பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ஷமி, எம்,அஸ்வின், ஆர்,அஸ்வின், வில்ஜியன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.