வளர்ந்து வரும் ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதுக்கு அர்ஷ்தீப் சிங் பரிந்துரை


வளர்ந்து வரும் ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதுக்கு அர்ஷ்தீப் சிங் பரிந்துரை
x

ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான அர்ஷ்தீப் சிங் ஒரு ஆண்டில் 20 ஓவர் போட்டிகளில் ௩௩ விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

துபாய்

2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு வீரர்களில் அர்ஷ்தீப் சிங்கும் ஒருவர். மற்ற மூன்று வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜாடன் மற்றும் நியூசிலாந்தின் பின் ஆலன்.

ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான அர்ஷ்தீப் ஒரு ஆண்டில் 20 ஓவர் போட்டிகளில் 33 விக்கெட்டுகளை எடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் இடம்பெற்றார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் 21 20 ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். விளையாடினார், ஸ்ட்ரைக் ரேட் 13.30 உடன் சராசரி 18.12.

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அர்ஷ்தீப் முதல் பந்திலேயே பாபர் ஆசாமை அவுட்டாக்கி அடுத்த ஓவரில் முகமது ரிஸ்வானை ஆட்டமிழக்கச் செய்தார்.டெத் ஓவரில் ஆசிப் அலியை அவுட்டாக்கினார் அவரது நான்கு ஓவர்கள் வீசி 3/32 என்று எடுத்தார்.

தென்னாப்பிரிக்காவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் 36 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் தென்னாப்பிரிக்காவின் வலுவான பந்துவீச்சாளராக உள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஜடான் ஒருநாள் போட்டிகளில் 431 ரன்களும், 20 ஓவர் போட்டிகளில் 367 ரன்களும் அடித்துள்ளார், இதில் மூன்று சதங்களும் அடங்கும்.

ஆலன் தனது 20 ஓவர் போட்டிகளில் 411 ரன்களும், ஒருநாள் போட்டியில் 387 ரன்களும் எடுத்துள்ளார். 23 வயதான அவர் 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் இடம்பெற்ற முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.


Next Story