ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையை பெற டிஜிட்டல் முறையிலான ஏலம் தொடங்கியது - ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு!


ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையை பெற டிஜிட்டல் முறையிலான ஏலம் தொடங்கியது - ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு!
x

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். போட்டிக்குரிய டி.வி. ஒளிபரப்பு உரிமம், டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மும்பை,

2023 முதல் 2027 வரையிலான அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். போட்டிக்குரிய டி.வி. ஒளிபரப்பு உரிமம் மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நிறைவடைந்த 15-வது ஐ.பி.எல். தொடருடன் 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு உரிமமும் முடிவுக்கு வந்தது. 2018-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.16,347 கோடிக்கு டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது.

இந்த நிலையில் முதல்முறையாக மின்னணு ஏலம் மூலம் உரிமம் வழங்கப்பட இருக்கிறது. இந்த உரிமத்தை வாங்குவதற்காக டிஸ்னி ஸ்டார், சோனி, ஜீ குழுமம், ரிலையன்சின் வியாகாம்18 உள்பட பத்து முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.

இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதன்படி 'ஏ-பிரிவில்' இந்திய துணை கண்டத்துக்கு மட்டும் டி.வி. ஒளிபரப்பு உரிமம், 'பி-பிரிவில்' இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம்.

'சி-பிரிவில்' இந்திய துணை கண்டத்துக்கு மட்டும் ஐ.பி.எல். தொடக்க ஆட்டம், இறுதி சுற்று, பிளே-ஆப் உள்ளிட்ட குறிப்பிட்ட 18 ஆட்டங்களுக்கான டிஜிட்டல் உரிமம், கடைசியாக 'டி-பிரிவில்' உலக நாடுகளுக்கான டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம்.

இவ்வாறு 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இவற்றுக்கு அடிப்படை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் சேர்த்து மொத்தத்தில் ரூ.60 ஆயிரம் கோடி வரை டி.வி. ஒளிபரப்பு, டி.ஜிட்டல் உரிமம் மூலம் வருவாய் கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. மும்பையில் இன்று பகல் 11 மணியளவில் மின்னணு ஏலம் தொடங்கியது.

ஏலத்துக்கான டெண்டர் விண்ணப்பம் வாங்கி, அவற்றை சமர்ப்பித்த தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் இணைப்பு வழங்குவார்கள்.

அதன்மூலம் அந்த நிறுவனங்கள், தொகையை குறிப்பிட்டு ஏலம் கேட்பார்கள். இரண்டு அல்லது 3 ரவுண்டுகள் ஏலம் கேட்க வாய்ப்பு வழங்கப்படும். யார் அதிக தொகைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு உரிமம் ஒதுக்கப்படும். ஆனால் அதிக தொகை கேட்டுக் கொண்டே போனால் ஏலம் மறுநாள் கூட நீடிக்கும்.


Next Story