முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்னை அணி உரிமையாளர் சீனிவாசன் சந்திப்பு..!


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்னை அணி உரிமையாளர் சீனிவாசன் சந்திப்பு..!
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அணி உரிமையாளர் சீனிவாசன் சந்தித்து பேசினார்.

சென்னை,

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்

இந்த சந்திப்பின் போது ஐபிஎல் தொடரில் சென்னை அணி வென்ற கோப்பையை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.


Next Story