பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி: சென்னையில் நடக்கிறது


பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி: சென்னையில் நடக்கிறது
x

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

சென்னை,

19 வயதுக்கு உட்பட்ட பள்ளி அணிகளுக்கான டேக் ரோட்டரி செரினிடி கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் வருகிற 23-ந் தேதி தொடங்கி ஜூலை முதல் வாரம் வரை நடக்கிறது.

ராயப்பேட்டை, வண்டலூர், தரமணி, தாம்பரம் உள்பட 6 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் செயின்ட் பீட்ஸ், நெல்லை நாடார், டான்போஸ்கோ, வித்யா மந்திர் (சென்னை), ஜெயேந்திர சரஸ்வதி (கோவை), கிரேஸ் மெட்ரிகுலேசன் (மதுரை) உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story