உலக கோப்பை கிரிக்கெட் : ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்ட கிரிக்கெட் வீரர் கைது


உலக கோப்பை கிரிக்கெட் : ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்ட கிரிக்கெட் வீரர் கைது
x

கழுத்தை நெரித்து, ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு

சிட்னி

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடருக்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்று உள்ளது. அங்கு அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு டேட்டிங் செயலியான டிண்டர் மூலம் ஒரு இளம் பெண் அறிமுகமாகி உள்ளார்.

அவர்கள் இருவரும் நவம்பர் 2ஆம் தேதியன்று சிட்னியில் சந்திக்க திட்டமிட்டனர். அதன்படி அதன்படி இருவரும் சந்தித்தனர். அப்போது வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பாக மது அருந்தவும் இரவு உணவுக்கும் வெளியே செல்லவும் இருவரும் திட்டமிட்டனர்.

இளம் பெண் குணதிலக்கவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு குணதிலக்க அந்தப் பெண்ணுடன் பலவந்தமாக பாலுறவில் ஈடுபட்டு உள்ளார்.

இது குறித்து அந்தபெண் தன்னிடம் முதலாவது சந்திப்பில் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் தனுஷ்க குணதிலக்க ஈடுபட்டதாக புகார் அளித்தார். அதன் பேரில் குணதிலக்க நவம்பர் 6ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

பாதிக்க்பட்ட பெண் தன்னை மூன்று முறை அவர் கழுத்தை நெரித்தார். அதில் ஒருமுறை 30 விநாடிகள் வரை நெரித்தார்.குணதிலக்கவிடம் ஆணுறையை அணியுமாறு கூறியபோதிலும், அவர் அணியவில்லை.

ஆணுறை இல்லாமல் பாலுறவு கொள்வதற்கோ அல்லது மூச்சுத் திணறலுடன் பாலுறவு கொள்வதற்கோ தான் சம்மதிக்கவில்லை என்று அந்தப் பெண் கூறி உள்ளார்.

ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்த சட்ட சீர்திருத்தங்கள் படி அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படுகிறது

குணதிலக்கவை அனைத்து வகையான விளையாட்டுகளில் இருந்தும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக நீக்கி உள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழுவையும் நியமித்துள்ளது.


Next Story