டெஸ்ட் கிரிக்கெட் குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கவலைப்படவில்லை - ஸ்டீவ் வாக் கண்டனம்


டெஸ்ட் கிரிக்கெட் குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்  கவலைப்படவில்லை  -   ஸ்டீவ் வாக் கண்டனம்
x

Image : AFP 

தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபடா, யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை

சிட்னி,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம்(பிப்ரவரி ) நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 7 பேர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். இதுவரை சர்வதேச போட்டிகளில் களமிறங்காத நெய்ல் பிராண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபடா, யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை

அந்த சமயத்தில் உள்நாட்டில் தென்ஆப்பிரிக்க 20 ஓவர் லீக் போட்டி நடப்பதால் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கு 2-ம் தர வீரர்களை உள்ளடக்கிய அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

இந்த நிலையில், இதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்டெஸ்ட் கிரிக்கெட் குறித்து கவலைப்படவில்லை. நான் நியூசிலாந்து அணியில் இருந்தால் நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டேன். அவர்கள் ஏன்? விளையாடுகிறார்கள் எனத் தெரியவில்லை. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அவர்கள் உரிய மரியாதை கொடுக்காத போது, எதற்காக விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கி செல்கிறதா என்று கேட்க வைக்கிறது. ஐ.சி.சி மற்றும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் ஐ.சி.சி.யோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ விரைவில் தலையிடாவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டாகவே இருக்காது. ஏனெனில் நீங்கள் உங்களது திறமையை மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக சோதிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடும். பெரிய கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஊக்குவிக்க வேண்டும். என்றார்.


Next Story