டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அவர் விளையாடியிருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் - தினேஷ் கார்த்திக்


டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அவர் விளையாடியிருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்  - தினேஷ் கார்த்திக்
x
தினத்தந்தி 1 Jan 2023 10:24 AM GMT (Updated: 1 Jan 2023 10:25 AM GMT)

அணியின் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள், வீரர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொருத்து அமையும்.என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையல் அரையிறுதிப் போட்டியுடன் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது.

அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு சில போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருப்பார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் சாஹலை இந்திய அணியின் ஆடும் லெவனில் தேர்வு செய்திருந்தால் சுவாரசியமான தேர்வாக இருந்திருக்கும் என இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

"அணியின் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள், வீரர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொருத்து அமையும். நேர்மையாக சொல்லப்போனால், இந்திய அணியின் அஸ்வின் 2022 உலகக்கோப்பை தொடரின் ஆரம்ப கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால் முடிவில் இவருடைய ஆட்டம் நன்றாக அமையவில்லை. ஆனால் சஹால் விளையாடியிருந்தால் நிச்சயம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திருப்பார். மேலும் சஹால் நிச்சயம் இந்திய அணியின் சுவாரசியமான தேர்வாகவும் இருந்திருப்பார். என தெரிவித்துள்ளார்.


Next Story