இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட விருப்பம் - முகமது ரிஸ்வான்


இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட விருப்பம் - முகமது ரிஸ்வான்
x

Image tweeted by @countychamp

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட விரும்புகிறார்கள் என பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சசெக்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மற்றும் இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா இருவரும் ஒன்றாக விளையாடினர்.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாட உள்ளதால் பாகிஸ்தானுக்கு திரும்பிய ரிஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார் அப்போது அவரிடம் புஜாராவுடன் சேர்ந்து விளையாடியது பற்றி கேள்வி கேட்டனர்,அப்போது அவர் கூறியதாவது,

இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட விரும்புவதாகக் கூறினார்.

மேலும்,"பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட விரும்புகிறார்கள், ஆனால் எங்கள் நிலைக்கு அப்பாற்பட்ட பிரச்சினைகள் எங்கள் கைகளில் இல்லை" என்று புஜாரா அவரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இந்திய அணி ஐ.சி.சி நடத்தும் தொடர்களில் மட்டும் பாகிஸ்தானை எதிர் கொண்டு விளையாடி வருகிறது.


Next Story