5-வது டி20 : இஷான் கிஷன், ருதுராஜ் ஆட்டமிழப்பு : மழை காரணமாக போட்டி மீண்டும் பாதிப்பு


5-வது டி20 : இஷான் கிஷன், ருதுராஜ் ஆட்டமிழப்பு : மழை காரணமாக போட்டி மீண்டும் பாதிப்பு
x

Image Courtesy : Twitter @BCCI 

தினத்தந்தி 19 Jun 2022 2:58 PM GMT (Updated: 19 Jun 2022 3:00 PM GMT)

இந்திய அணி 3.3 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் மீண்டும் போட்டி தடைப்பட்டுள்ளது.

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய இருந்தது.

இந்த நிலையில் இந்த போட்டி தொடங்குவதில் மழை காரணமாக முதலில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 19 ஓவர்களாக போட்டி குறைபட்டு 7.50 மணிக்கு தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் முதல் ஓவரில் 2 சிக்சர்களை அடித்தார். பின்னர் நிகிடி பந்துவீச்சில் 15 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ருதுராஜ் 10 ரன்களில் வெளியேறினார்.

இந்திய அணி 3.3 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் மீண்டும் போட்டி தடைப்பட்டுள்ளது. களத்தில் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் உள்ளனர். இந்த போட்டி இனி தொடங்கும் பட்சத்தில் ஓவர்கள் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.


Next Story