வெளியேற்றுதல் சுற்று : பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ பந்துவீச்சு தேர்வு


வெளியேற்றுதல் சுற்று : பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இதில் வெற்றி பெறும் அணி முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராஜஸ்தானுடன் ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடும் முனைப்பு காட்டும். இந்த நிலையில் மைதானத்தில் லேசான மழை பெய்து வரும் காரணத்தால் இந்த போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும் நிலையில் இன்று 7.55 மணிக்கு டாஸ் போடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.


Next Story