அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவீர்களா ? - தோனி அளித்த பதில்..!!


அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவீர்களா ? -  தோனி அளித்த பதில்..!!
x

Image Courtesy : IPL / BCCI 

ஐபிஎல் போட்டியில் அடுத்த வருடம் விளையாடுவது குறித்து தோனி பேசியுள்ளார்.

மும்பை,

மும்பை பிரபோர்னே மைதானத்தில் இன்று நடைபெறும் 68-வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறினாலும் ஆறுதல் வெற்றி பெரும் முனைப்புடன் சென்னை அணி களமிறங்குகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது வர்ணனையாளர் இயான் பிஷப் தோனிடம், "அடுத்த வருடம் தங்களை சென்னை அணியில் பார்க்க முடியுமா என கேள்வி எழுப்பினார்?" .

அதற்கு பதில் அளித்த தோனி, "நிச்சயமாக , அதற்கு மிகவும் எளிய காரணம் தான் உள்ளது. இந்த வருடம் மும்பையில் மட்டும் விளையாடிவிட்டு சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நன்றாக இருக்காது.

மும்பையில் எனக்கு ஒரு அணியாகவும் தனி மனிதனாகவும் நிறைய அன்பும் பாசமும் கிடைத்தது. ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களிடம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. அடுத்த ஆண்டு வெவ்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்.அப்போது ஒவ்வொரு மைதானத்திற்கும் சென்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கலாம்.

இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி. ஏனென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னர் நடக்கப்போவது பற்றி இப்போதே கணிக்க முடியாது. ஆனால் நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு இன்னும் வலுவாக திரும்ப வருவதற்கு கடினமாக உழைக்கிறேன்," என்று தோனி கூறினார்.



Next Story