இன்றைய போட்டியில் சாஹல் விளையாடாதது மிகப்பெரிய தவறு - இந்திய முன்னாள் வீரர் கருத்து


இன்றைய போட்டியில் சாஹல் விளையாடாதது மிகப்பெரிய தவறு - இந்திய முன்னாள் வீரர் கருத்து
x

இன்றைய போட்டியில் சாஹல் விளையாடாதது மிகப்பெரிய தவறு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ,முன்னாள் தேர்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்

அடிலெய்ட்,

8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் இன்று நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி படுதோல்வியை சந்தித்து உள்ளது.

இன்றைய போட்டியில் சாஹல் விளையாடாதது மிகப்பெரிய தவறு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ,முன்னாள் தேர்வாளர் சரந்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் கூறிய அவர் ,

யுஸ்வேந்திர சாஹல் தொடர் முழுவதும் விளையாடதது அணி நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறு. குறிப்பாக இன்றைய போட்டியில் விளையாடாதது. "லீக் சுற்று ஆட்டத்தில் ரிஷப் பண்ட் விளையாடாதது (அவர் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடியது ) என்னை குழப்பிவிட்டது . என தெரிவித்துள்ளார்


Next Story