ரன் அவுட்டான பின் அஸ்வின் மீது விரக்தி அடைந்த ரியான் பராக் - வைரல் வீடியோ


ரன் அவுட்டான பின் அஸ்வின் மீது விரக்தி அடைந்த ரியான் பராக் - வைரல் வீடியோ
x

Image Courtesy : Twitter / IPL 

தினத்தந்தி 25 May 2022 11:33 AM GMT (Updated: 25 May 2022 11:34 AM GMT)

அஸ்வின் போன்ற சீனியர் வீரர்களிடம் இவ்வாறு நடந்து கொள்வதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொல்கத்தா,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய குஜராத் 3 பந்துகள் மீதம் இருக்க 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது அஸ்வினும், ரியான் பராக்கும் களத்தில் ஒன்றாக விளையாடினர். அப்போது கடைசி ஓவரின் 5வது பந்தை அஸ்வின் எதிர்கொள்ளும் போது பந்து "வைடு" ஆக செல்ல விக்கெட் கீப்பர் சாஹா அதை பிடித்தார். எதிர் முனையில் நின்ற ரியான் பராக் அஸ்வினிடம் கேட்காமல் ரன் ஓடினார். இதனை கண்ட சாஹா பந்துவீச்சாளரிடம் பந்தை வீச பராக் ரன் அவுட்டனார்.



அஸ்வின் மீது தவறு இல்லை என்றாலும் ரியான் பராக், ஆட்டமிழந்ததும் அஸ்வினை பார்த்து சில நொடிகள் விரக்தியை வெளிப்படுத்தினார்.இதனை அஸ்வின் கண்டுகொள்ளவில்லை. பராக் தவறு செய்துவிட்டு அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள்-யிடம் இவ்வாறு நடந்து கொள்வதா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story