ஒருநாள் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சர்மா புதிய சாதனை


ஒருநாள் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்து  ரோகித் சர்மா புதிய  சாதனை
x

ஒருநாள் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆமதாபாத்,

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.பாகிஸ்தான் அணி தரப்பில் பாபர் ஆசம் 50 ரன், ரிஸ்வான் 49 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், பாண்ட்யா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், கில் களம் புகுந்தனர். இதில் கில் 16 ரன் எடுத்த நிலையிலும் அடுத்து வந்த கோலியும் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 63 பந்தில் 86 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கே.எல்.ராகுல் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா 6 சிக்ஸர்கள் அடித்தார் . இதனால் ரோகித் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார். ஒருநாள்போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 331 சிக்ஸர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 2வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 302 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் உள்ளார்

மேலும், 300 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றுள்ளார்.


Next Story