டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கோவை..!


டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கோவை..!
x
தினத்தந்தி 27 Jun 2023 3:30 PM GMT (Updated: 27 Jun 2023 5:10 PM GMT)

20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது கோவை

சேலம்,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. . இன்று இவு 7.15 மணிக்கு 19-வது லீக் ஆட்டம் நடக்கிறது. ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ்-அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக சுஜய் , சுரேஷ் குமார் களமிறங்கினர். சுரேஷ் குமார் 4 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சாய் சுதர்சன் , சுஜய் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். சுஜய் 44 ரன்கள் , சாய் சுதர்சன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து அதிரடி காட்டிய அதீக் 31 ரன்களும் , ராம் அரவிந்த் அரை சதம் அடித்தார் .இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது கோவை. சேலம் அணியில் சன்னி சந்து 3 விக்கெட் வீழ்த்தினார் . தொடர்ந்து 200 ரன்கள் இலக்குடன் சேசேலம் அணி விளையாட உள்ளது


Next Story