டி.என்.பி.எல்.கிரிக்கெட் : திண்டுக்கல் அணிக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேலம் அணி


டி.என்.பி.எல்.கிரிக்கெட் : திண்டுக்கல் அணிக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேலம் அணி
x

இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் சேலம் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் சேலம் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன..அதில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பேட்டிங்கைதேர்வு செய்தது.தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோபிநாத் 9ரன்கள் ,கவின் 2ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த டெர்லி பெராரியோ சிறப்பாக விளையாடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் ரன்கள் குவிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள்சேலம் அணி எடுத்தது.தொடர்ந்து 125 ரன்கள் இலக்குடன் திண்டுக்கல் அணிவிளையாடி வருகிறது.


Next Story