டி.என்.பி.எல் : திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் சேலம் பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல் : திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் சேலம் பந்துவீச்சு தேர்வு
x

இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

அடுத்த கட்ட போட்டிகள் தற்போது கோவையில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் - சேலம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

சேலம் அணி (ஆடும் லெவன்): கோபிநாத், எஸ் அபிஷிக், ஆர் கவின், டேரில் ஃபெராரியோ, எஸ் கணேஷ், ராஜேந்திரன் கார்த்திகேயன், ஜாபர் ஜமால், முருகன் அஷ்வின், ஜி கிஷூர், எம் கணேஷ் மூர்த்தி, ஜி பெரியசாமி

திருப்பூர் அணி (ஆடும் லெவன்): ஸ்ரீகாந்த் அனிருதா , எஸ் அரவிந்த், சுப்ரமணியன் ஆனந்த், மான் பாஃப்னா, பி பிரான்சிஸ் ரோகின்ஸ், துஷார் ரஹேஜா , ஆர் ராஜ்குமார், எம் முகமது, அஸ்வின் கிறிஸ்ட், எஸ் மோகன் பிரசாத், எஸ் மணிகண்டன்


Next Story