கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது எப்போது? - ரோகித் சர்மா பதில்


கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது எப்போது? - ரோகித் சர்மா பதில்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 10 March 2024 2:19 AM GMT (Updated: 10 March 2024 2:20 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

தர்மசாலா,

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி தர்மசாலாவில் நேற்று முடிவடைந்தது.

தர்மசாலா டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா (வயது 36) தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது எப்போது என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து ரோகித் சர்மா கூறியதாவது, எப்போது எனது ஆட்டம் அணிக்கு போதுமானதாக இல்லை என்று தோன்றுகிறதோ? அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்து விடுவேன். ஆனால் உண்மையை சொல்லப்போனால் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக எனது கிரிக்கெட் ஆட்டம் மெருகேறி இருக்கிறது. தற்போது நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story