நாளைய போட்டியில் கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் விளையாடுவார்களா?- ராகுல் டிராவிட் விளக்கம்


நாளைய போட்டியில் கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் விளையாடுவார்களா?- ராகுல் டிராவிட் விளக்கம்
x

அப்போது தினேஷ் கார்த்திக் நாளைய போட்டியில் பங்கேற்பாரா? கே.எல். ராகுல் , பேட்டிங் குறித்த கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்தார்.

பிரிஸ்பேன்,'

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் கே.எல்.ராகுல் 4, 9 மற்றும் 9 ரன்கள் என மோசமான ஃபார்மில் உள்ளார். இதற்கிடையே, அதிரடி வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்-க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை அவரை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து வருகின்றனர் .

இந்த போட்டிக்கு முன்னதாக இன்று இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி அளித்தார்.

அப்போது தினேஷ் கார்த்திக் நாளைய போட்டியில் பங்கேற்பாரா? கே.எல். ராகுல் , பேட்டிங் குறித்த கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்தார். அவர் கூறியதாவது ;

கே.எல். ராகுல் தலைசிறந்த வீரர். ஆடுகளத்தில் சாதனைகள் மூலம் அதை அவர் நிரூபித்துள்ளார். அவர் சூப்பராக பேட்டிங் செய்து வருகிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இந்தத் தொடர் எளிதானதாக அமையவில்லை. இதுபோன்ற விஷயம் டி20-யில் நிகழும். இந்த தொடர் மிகவும் சவாலானது. பயிற்சி ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய திறமை மற்றும் தரம் எங்களுக்கு தெரியும். இந்த கண்டிசனுக்கு அவர் மிகவும் பொறுத்தமானவர். சிறந்த ஆல்-ரவுண்ட் விளையாட்டை பெற்றுள்ளார். சிறந்த பேக்-ஃபுட் வீரர். இந்த கண்டிசனுக்கு இதுபோன்ற வீரர்தான் தேவை. அவர் பந்தை எதிர்கொள்ளும் விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம்.

தினேஷ் கார்த்திக் இன்று நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டார். துரதிருஷ்டவசமாக, காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டு நல்ல நிலையில் உள்ளார். பயிற்சி மேற்கொண்டார். நாளைய போட்டிக்கு முன் அவருடைய உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது மதிப்பீடு செய்ய வேண்டும். அவர் பழைய உடல் தகுதியை பெற, சிறந்த பயிற்சி அளித்துள்ளோம். நாளை காலை அவர் எவ்வாறு உள்ளார் என்பதை பார்த்து, அதன் பிறகு இறுதி முடிவு எடுப்போம்.


Next Story