பெண்கள் கிரிக்கெட் : முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி


பெண்கள் கிரிக்கெட் : முதல் ஒருநாள் போட்டியில்  இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
x

Image Courtesy : BCCI Women Twitter

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

பல்லேகலே ,

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிலாக்ஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி 38 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.அதிகபட்சமாக இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ஜூலை 4-ந் தேதி நடக்கிறது .


Next Story