ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின், ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
இன்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி, ஐதராபாத் எப்.சி அணியுடன் மோதியது.
கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி, ஐதராபாத் எப்.சி அணியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணியில் முகமது சஜித் 13 வது நிமிடத்திலும் ஐதராபாத் அணியில் ஜேவியர் சிவெரியோ 45+4 வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்த நிலையில் சென்னையின் எப்.சி, ஐதராபாத் எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது
Related Tags :
Next Story