எப்ஏ கோப்பை கால்பந்து; சுந்தர்லேண்ட் எப்.சியை வீழ்த்தி நியூகேஸில் அணி வெற்றி..!
நியூகேஸில் அணியின் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் இசாக் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
லண்டன்,
எப்ஏ கோப்பை கால்பந்து தொடர் இங்கிலாந்து நாட்டில் உள்ளூர் அணிகளுக்கு இடையே நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டி ஆகும்.
இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சுந்தர்லேண்ட் எப்.சி மற்றும் நியூகேஸில் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய நியூகேஸில் 3-0 என்ற கோல் கணக்கில் சுந்தர்லேண்ட் எப்.சியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நியூகேஸில் அணி தரப்பில் அலெக்சாண்டர் இசாக் 2 கோல்களும், டேனியல் பல்லார்டு ஒரு கோலும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்த வெற்றியின் மூலம் நியூகேஸில் அணி சுந்தர்லேண்ட் எப்.சியிடம் அடைந்துவந்த நீண்ட கால தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்கு முன்னர் இவ்விரு அணிகளும் மோதிய 6 ஆட்டங்களிலும் சுந்தர்லேண்ட் எப்.சியே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story