அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள்... தமிழகத்தில் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாட்டம்


அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள்... தமிழகத்தில் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2022 2:54 AM GMT (Updated: 19 Dec 2022 3:18 AM GMT)

உலகக்கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணியையும், மெஸ்சியையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சென்னை,

திரில்...பரவசம்...ஆச்சரியம் இப்படி இறுதிப்போட்டிக்குரிய எல்லா அம்சங்களை கொண்டிருந்த உலகக்கோப்பை கால்பந்தில் இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.

அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று இருந்தது. மெஸ்சியின் கனவு நனவானது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் ஏக்கமும் தணிந்தது.

உலகின் பல கோப்பைகளை தான் விளையாடும் அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ள மெஸ்சி, தனது நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்றுகொடுக்கவேண்டும் என்பதை தனது லட்சியமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் அதனை நனவாக்கிய மெஸ்சி, தனது ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டுசென்றார்.

அர்ஜெண்டினாவின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும், அதே நிலை கானப்பட்டது. குறிப்பாக கேரளா, கொல்கத்தா போன்ற மாநிலங்களில் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்கள் பட்டாசு வெடித்தும், அர்ஜெண்டினாவின் கொடியை கைகளில் ஏந்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக தமிழகத்திலும் மெஸ்சியின் ரசிகர்கள் நள்ளிரவில் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story