ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியில் முகமது ரபிக் ஒப்பந்தம்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியில் முகமது ரபிக் ஒப்பந்தம்
x

Image Courtesy : East Bengal Twitter 

சென்னையின் எப்.சி. அணியில் முகமது ரபிக் 2 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியில் நடுகள வீரரான முகமது ரபிக் 2 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்த 31 வயதான முகமது ரபிக் இந்திய அணிக்காக 12 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். அத்துடன் ஐ.எஸ்.எல். போட்டியில் ஈஸ்ட் பெங்கால், மும்பை சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகளிலும் இடம் பிடித்து ஆடியுள்ளார். கடைசியாக அவர் ஈஸ்ட் பெங்கால் அணியில் அங்கம் வகித்தார்.

'சென்னையின் எப்.சி. அணியில் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 2 முறை சாம்பியனும், சிறந்த அணிகளில் ஒன்றுமான சென்னை எப்.சி.யின் வெற்றிக்கு உதவ எனது சிறந்த ஆட்டத்தை அளிக்க முயற்சிப்பேன்' என்று முகமது ரபிக் கருத்து தெரிவித்துள்ளார்


Next Story