ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தி சென்னையின் எப்.சி வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தி சென்னையின் எப்.சி வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

கோவாவில் இன்று நடைபெற்ற போட்டியில் எப்.சி கோவா-சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

கோவா,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் இன்று நடைபெற்ற போட்டியில் எப்.சி கோவா-சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் குவாமே ஆட்டத்தின் 10-வது நிமித்திலும் 73-வது நிமிடத்திலும் என இரண்டு கோல்கள் அடித்தார். கோவா அணி சார்பில் நோவா ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சென்னை அணியின் வெற்றியின் மூலம் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.


Next Story