ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் பயிற்சியாளராக பிரடாரிக் நியமனம்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் பயிற்சியாளராக பிரடாரிக் நியமனம்
x

Image Courtesy : Chennaiyin FC Twitter 

சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தாமஸ் பிரடாரிக் நேற்று நியமிக்கப்பட்டார்.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் வரும் சீசனுக்கான சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜெர்மனி முன்னாள் முன்கள வீரரான தாமஸ் பிரடாரிக் நேற்று நியமிக்கப்பட்டார்.

ஜெர்மனி அணிக்காக 8 சர்வதேச போட்டிகளில் விளையாடியவரான தாமஸ் பிரடாரிக் ஜெர்மனி மற்றும் அல்பேனியாவில் கிளப் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 47 வயதான தாமஸ் பிரடாரிக் கூறுகையில் 'என் மீது நம்பிக்கை வைத்து பயிற்சியாளராக தேர்வு செய்த சென்னையின் எப்.சி. அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த அருமையான பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்' என்றார்.


Next Story